Friday, September 10, 2010

VANITHA-வனிதா 8

இன்னும்  ஐந்து  நிமிடத்தில்  விமானம்  தரை  இறங்கும்  என  அறிவிப்பு  வந்ததும்  இருவரும்  தங்கள்  கையில்  இருந்த  புத்தகத்தை  கீழே வைத்துவிட்டு  இறங்க  தயாராக  சற்று  நிமிர்ந்து  உட்கார்ந்தனர் .சரியாக   ஐந்து  நிமிடத்தில்  விமானம்  டெல்லி  ஏர்போர்ட் இல்  தரை  இறங்கியது .இருவரும்  விமானத்தை  விட்டு  இறங்கி  தங்கள்  உடமைகளை  எடுத்து  கொண்டு  ஏர்போர்ட்  வாசலுக்கு  வந்தனர் ,அங்கு  அவர்களுக்காக   அனுப்பி  வைக்க  பட்டிருந்த   கார்இன்  டிரைவர்  அவர்கள்  பெயர்  எழுதிய   பலகையுடன்   வரும்  பயணிகளை  பார்த்து  கொண்டிருந்தான் .இருவரும்  அவனை  நெருங்கியதும்  ஒரு  புன்னகை    செய்து  விட்டு  அவர்கள்  உடமைகளை  எடுத்து  கொண்டு  கார்  நோக்கி  நடக்க ,அவர்களும்  அவனை  பின்  தொடர்ந்து  சென்று   காரில் ஏறி அமர்ந்து  கொண்டனர் .
                    கார்  புறப்பட்டு  சென்று  கொண்டிருந்த  போது  வனிதா  டிரைவர் இடம் ,"நாம  எங்க  போறோம் ?"என  கேட்க ,"ஜி !சம்ச  நகி !(புரியலை)"என  ஹிந்தியில்  கூறினான் .உடனே  வனிதா   "ஹம்  கிதர்  ஜாரா  ஹம் ?"என  ஹிந்தியில்  கேட்க  "ஹோட்டல்  மா !".என  பதில்  அளித்தான்  .இருவரும்  சிறுது  நேரம்    ஹிந்திஇல்  டெல்லி  பற்றி  பேச  ஆரம்பித்தனர் ,சிறிது   நேரம்   பேசி  விட்டு  அங்கித்   தன்னை  ஆச்சரியதுடன்  பார்த்து  கொண்டிருப்பதை  பார்த்து ,"வாட் ?"என  கேட்க ,"ஒன்னும்  இல்ல .உங்களுக்கு  ஹிந்தி  கூட  தெரியுமா ?""ம்ம் .ஸ்கூல்ல செகண்ட்  language""ஓஹோ "என  இருவரும்  பேசி  கொண்டிருந்த  போது  அங்கித்  செல்  ஒலித்தது .
                        அங்கித்  செல்ஐ  எடுத்து  "ஹலோ"........"ம்ம்  இப்பதான்  .எவர்திங்  குட் .கார்ல  ஹோட்டல்கு  போயிடு  இருக்கேன்"என  தன  மகன்  பற்றி  விசாரிக்க  ஆரம்பத்ததில்  இருந்து  அவன்  தன்  மனைவி  உடன்  பேசி  கொண்டிருக்கிறான்  என்பதை  புரிந்து  கொண்ட  வனிதா , அவர்கள்  பேசுவதை  கேட்பது  நாகரிகம்  இல்லை என  தன்  பார்வையை  ஜன்னல்   பக்கம்  திருப்பி  கொண்டாள்.அங்கித்  சிறிது   நேரம்   பேசி  விட்டு  தன்  போன்ஐ  கட்  செய்து  விட்டு  ஜன்னல்   பக்கம்  திரும்பிய  போது  அவன்  முகம்  மாறி  இருந்தது .
                      தனக்கென  ஒரு  அன்பான   மனைவியும்  குழந்தையும்  இருக்கும்  போது ,தான்  மற்றொரு  பெண்ணிடம்  ,அதுவும்  திருமணம்  ஆனவளிடம்  இவ்வாறு  நடந்து  கொண்டது  அங்கித்ற்கு ,வேதனை  அளித்தது .இனி  இவ்வாறு  கண்டிப்பாக  நடக்க  கூடாது  என  தனக்குள்  உறுதி  செய்து  கொண்டான் .அதை  சற்று  நிமிர்ந்து  உட்கார்ந்து  ஒரு  பெருமூச்சி  விட்டு  வெளிபடுத்தினான்  .ஒரு  மணி  நேர   பயணத்திற்கு  பின் ,கார்  அவர்களுக்கு  புக்  செய்ய  பட்டிருந்த  ஹோட்டல்  வாசலில்  சென்று  நின்றது .

No comments:

Post a Comment